tamilnadu

img

தாரிகாமியை தில்லி அழைத்துச் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி


காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் யூசுப் தாரிகாமியை மருத்துவசிகிச்சைக்காக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வகை செய்யும் அர சியலமைப்புச் சட்ட பிரிவு 370ஐ அட்டூழியமான முறையில் ரத்து செய்துள்ள  மத்திய பாஜக அரசு, அந்த மாநிலத்தையே துண்டாடி இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றி, அம்மாநில மக்களை முற்றாக ஒடுக்கும்  விதத்தில் மாநிலத்தையே திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றியிருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருக் கிறார்கள். முன்னாள் முதலமைச்சர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி உள்ளிட்ட தலைவர் களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும் நான்குமுறை சட்டமன்ற உறுப்பின ராக இருந்தவருமான முகமது யூசுப் தாரிகாமி உள்ளிட்ட தலைவர்களும் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். 
 இந்நிலையில் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் முகமது யூசுப் தாரிகாமியையும் அங்குள்ள மக்களையும் சந்திக்க மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, சிபிஐ பொதுச் செயலாளர் து.ராஜா ஆகியோர் நேரில் சென்றனர். ஆனால் அவர்கள் நகருக்குள் சென்றால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கும் என்று கூறி, விமான நிலையத்திலேயே சிறை வைக்கப்பட்டு பின்னர் திருப்பி அனுப்பப்பட்டனர். பின்னர் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் சீத்தாராம் யெச்சூரி, திமுக சார்பில் திருச்சி சிவா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் ஸ்ரீநகருக்குள் நுழைய முயன்றபோதும் இதேநிலைதான் ஏற்பட்டது.  இத்தகைய பின்னணியில், மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர் தாரிகாமி உடல்நலம் குன்றிய நிலையில்  அவர் கைது செய்யப்பட்டு எங்கு வைக்கப்பட்டிருக்கிறார் எனத் தெரிய வில்லை என்றும், அவரை சக தோழர்  என்ற முறையில் சந்தித்து நலம் விசாரிக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டு  உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை சீத்தாராம் யெச்சூரி தாக்கல் செய்தார். இந்த மனுவை ஆகஸ்ட் 28ம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், நண்பர் என்ற முறையில் தாரிகாமியை நேரில் சந்திக்க அனுமதிப்பதாகவும், அவரை சந்தித்துவிட்டு அதுபற்றிய விபரத்துடன் உச்சநீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டு அனுமதி அளித்தது. இந்த நிலையிலேயே வியாழனன்று சீத்தாராம் யெச்சூரி ஸ்ரீநகர் சென்று முகமது யூசுப் தாரிகாமியை சந்தித்து அவரது உடல்நலன் குறித்து விசாரித்து விட்டு திரும்பினார். 
இதைத்தெடர்ந்து இன்றுநடைபெற்ற வழக்கு விசாரணையின் போது யூசுப் தாரிகாமியை மருத்துவ சிகிச்சைக்காக தில்லி அழைத்து செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.